திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாழையூத்தில் சண்முக பெருமாள்(56) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மூலைக்கரைப்பட்டி காவல் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மூலைக்கரைபட்டியில் பணியில் இருந்த போது திடீரென சண்முக பெருமாளுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனால் உடனடியாக தனியார் மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சண்முக பெருமாள் பரிதாபமாக உயிரிழந்தார்.