சென்னையில் இருந்து தனியார் ஆம்னி பேருந்து கன்னியாகுமரி நோக்கி சென்றது. அந்த பேருந்தை லத்திஷ் என்பவர் ஓட்டி சென்றார். அந்த பேருந்து திருச்சி பெரம்பலூர் இடையே பாடாலூர் கொண்டக்கார பள்ளம் என்ற இடத்தில் சென்றது. அதேநேரம் இரும்பு லோடு ஏற்றிக்கொண்டு சரவணன் என்பவர் லாரியை ஆம்னி பேருந்துக்கு முன்னால் ஓட்டி சென்றார். இந்நிலையில் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து லாரியின் பின்னால் பயங்கரமாக மோதி சேதமடைந்தது.

இந்த விபத்தில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த பிரதேஷ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்த படுகாயமடைந்த அந்தோணி ராஜ், ஞானராஜ், லட்சுமி, சரவணன், லத்தீஷ் உள்பட 8 பேரை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அந்தோணி ராஜும் உயிரிழந்தார். மற்ற நபர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.