திருச்சி மாவட்டத்தில் உள்ள புத்தாநத்தம் அருகே மணியன் குறிச்சியில் பழமையான மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலுக்கு எதிரே சிதிலமடைந்த தேர் இருக்கிறது. இந்நிலையில் மாமல்லபுரத்தைச் சேர்ந்த பத்மநாபன் மணிகண்டன் ஆகிய இருவரும் தேரில் இருந்த மரத்தினால் ஆன கருப்புசாமி சிலையை திருட முயன்றனர்.

இதனை பார்த்த பொதுமக்கள் இரண்டு பேரையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் வந்த காரை பறிமுதல் செய்தனர்.