படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

கேரள மாநிலம் மலப்புரத்தில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. 25 பேர் பயணிக்கும் படகில் 40 பயணிகளை ஏற்றியதால் படகு கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.

மேலும் நீரில் மூழ்கிய பயணிகளை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனது twitter பக்கத்தில் படகு கவிழ்ந்த விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததோடு ,ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் Prime Minister National Relief Fund-ல் இருந்து இரண்டு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.