பொதுவாகவே கோடை காலங்களில் வீட்டில் நல்ல குளிர்ச்சியான உணவுப் பொருட்களை நாம் சேர்த்து வைப்பது வழக்கம். அப்படி சேமித்து வைக்கும் பொருள்களில் சில விரைவில் கெட்டுப் போய்விடும். அதில் தயிரும் ஒன்றுதான். தயிர் விரைவில் புளிப்பு சுவையை அடைந்து விடும். இதற்கு நீங்கள் வீட்டில் அதிகமாக தயிர் வாங்கி வைத்திருந்தால் அதனை சேமித்து வைப்பதற்கு ஏற்ற பாத்திரத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.

அதற்கு மண் பாத்திரம்தான் சிறந்தது. மண்பானையில் தயிரை சேமித்து வைத்தால் தயிர் மிக குளிர்ச்சியாக பல நாட்கள் சுவையாக இருக்கும். குறிப்பாக தயிரை உறைய வைப்பதற்கு சிறந்த நேரம் இரவு தான். பகலில் வைத்தால் மோர் போல ஆகிவிடும். தயிரை குளிர்ச்சியான இடத்தில் அல்லது ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். வெதுவெதுப்பான இடத்தில் வைத்தால் புளிப்பாக மாறிவிடும். வீட்டில் பால் பொருட்கள் வைத்திருக்கும் இடத்தில் மற்ற உணவு பொருட்களை வைக்கக்கூடாது. ஏனென்றால் தயிரின் பக்கத்தில் மற்ற உணவுப் பொருட்களை வைத்தால் வாசனையை உறிஞ்சி அது புளிப்பாக மாறிவிடும்.