அதிக வெப்பம் காரணமாக மேற்குவங்க மற்றும் ஆந்திர பிரதேச மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று ரெட் அலர்ட் விடுத்துள்ளது. மேலும் உள் கர்நாடகா, ஒடிசா மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் தமிழ்நாடு உள்ளிட்ட தெற்கு பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் மிக வெப்பமான ஆண்டாக 2024 ஆம் ஆண்டு மாறி வருகிறது.