தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வானது கடந்த 18 ஆம் தேதி வெளியானது. தேர்வு முடிவில் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணக்கர்கள் தேர்ச்சி அடைந்தனர். இதில் திண்டுக்கல்லை சேர்ந்த மாணவி 600 இக்கு 600 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்தார். 47,934 பேர் தேர்ச்சி அடையவில்லை. இதனால், அவர்களுக்கான துணைத்தேர்வு தேதி ஜூன் 19 முதல் ஜூன் 26 வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில் +2 பொதுத்தேர்வு மறுகூட்டலுக்கு இன்று (மே 30) முதல், மாணவர்கள் என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது. மறுமதிப்பீடு பாடம் ஒன்றிற்கு  505, மறுகூட்டல் உயிரியல் பாடத்திற்கு 305, ஏனைய பாடங்கள் ஒவ்வொன்றிற்கு 205 வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து விண்ணப்பித்த பாடங்களுக்கு விடைத்தாள் நகல்களை பெறலாம்.