தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்தது.அதேசமயம் அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயிலின் தாக்கமும் அதிகமாக இருந்த நிலையில் நேற்றுடன் அக்னி நட்சத்திரம் நிறைவு பெற்றது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் ஜூன் இரண்டாம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிட்ட செய்தி குறிப்பில்., தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகம், புதுவை,காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று முதல் ஜூன் இரண்டாம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.