நடப்பு கல்வியாண்டில்  பிளஸ் 2 தேர்வு  கடந்த மார்ச் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மூன்றாம் தேதி வரை நடைபெற உள்ளது. மாணவர்கள் தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக்கொண்டு தேர்வுகளை கவனத்தோடு எழுதி வருகின்றனர். இந்நிலையில் +2 படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நடப்பு ஆண்டில் 50,000 +2 மாணவர்கள் மொழிப்பாட தேர்வு எழுதாதது குறித்து பேரவையில் கேள்வி எழுப்பப்பட்டது. பதிலளித்த அமைச்சர், தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஆசிரியர்கள் மாணவர்களின் வீட்டுக்கு வந்து படிக்க வரச் சொல்லும் போது பெற்றோர்கள் அனுமதியுங்கள். இந்த வயதில் பணத்தைவிட கல்வியே அவசியம் என்றார்.