தமிழகம் முழுவதும் தேரோடும் விதிகளில் உள்ள மின்கம்பங்களை புதைவடங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் மார்ச் 20ஆம் தேதி கூடிய நிலையில் தற்போது கேள்வி நேரம் நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழகத்தில் தேரோடும் வீதிகளை கணக்கெடுப்பு செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மின் கம்பங்களை புதைபடங்களாக மாற்ற கணக்கெடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பதில் அளித்துள்ளார்.