சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயில் இன்று  மார்ச் 25ஆம் தேதி பகுதி ரத்து செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து கேரளத்தில் திருவனந்தபுரத்திற்கு தினமும் இரவு 7.45 மணிக்கு விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் இன்று  மார்ச் 25ஆம் தேதி திருச்சூர் வரை மட்டுமே இயக்கப்படும்.

பின்னர் மருமார்கமாக திருவனந்தபுரத்திலிருந்து சென்னைக்கு தினமும் மாலை 3 மணிக்கு விரைவு ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில் இந்த நிலையில் மார்ச் 26 ஆம் தேதி திருச்சூரில் இருந்து இரவு 8.43 மணிக்கு புறப்பட்டு குறிப்பிட்ட நேரத்தில் சென்னைக்கு வந்தடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.