திருச்சி மாவட்டத்தில் உள்ள தாயனூரில் வசித்து வருபவர் கவிதா. இவர் ஆதார் கார்டில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக அதை மாற்ற முடியாமல் தவித்து வருகிறார். கடந்த 1982 ஆம் வருடம் பிறந்த கவிதாவுக்கு ஆதாரில் 1900 என அச்சிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கவிதாவின் வயது 122 என மதிப்பிடப்படுவதால் இந்த ஆதார் கார்டை அவர் எதற்கும் பயன்படுத்த முடியவில்லை. இது குறித்து கவிதா “அனைத்திற்குமே தற்போது ஆதார் கார்டு தேவைப்படுவதால், அதை சரிசெய்ய 4 ஆண்டுகளாக போராடி வருகிறேன் என்று திருச்சி ஆட்சியரை அணுகி உள்ளார்.