இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் பலரும் வேலை இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள். படித்தும் வேலை கிடைப்பதே குதிரை கொம்பாக இருக்கிறது. ஒரு சிலர் நன்கு படித்தும் தவறான பழக்கங்களால் வழி தடுமாறி செல்கிறார்கள். இத்தகைய சூழலுக்கு மத்தியிலும் ஒரு சிறுவன் 18 வயதில் டாக்டராக பட்டம் பெற்றுள்ளார்.

இதனை தொடர்ந்து சில வருடங்கள் பிறகு கலெக்டராகவும், தொழிலதிபராகவும் உருமாறினார். அவர் ஒரு ரோமானிய துறவி. டாக்டராக இருந்த அவர், 22 வயதில் UPSC நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று நேரடியாக ஐஏஎஸ்-க்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மத்திய பிரதேசத்தில் மாவட்ட கலெக்டராக சில வருடங்கள் ணியாற்றினார். இதனையடுத்து தனது நண்பர்களுடன் சேர்ந்து யூடியூப்பில் சிவில் சர்வீசஸ் பயிற்சி அளிக்க முடிவு செய்து அதை செய்து வருகிறாராம்.