EPFO இன் கீழ் ஓய்வூதியம் பெறும் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்று  வெளியிடப்பட்டுள்ளது. அதாவது EPFO இன் உயர் ஓய்வூதியம் பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இந்த மாதம் 11ஆம் தேதியோடு முடிவடைகிறது. EPFO திட்டமானது செப்டம்பர் 1, 2014-க்கு முன் பணியில் சேர்ந்த ஊழியர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்கிறது.

எனவே விண்ணப்பிக்காதவர்கள் விரைவில் விண்ணப்பிக்கவும். இந்த காலக்கெடுவை மீண்டும் ஒருமுறை நீட்டிக்க வாய்ப்பில்லை என்று EPFO ​​சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இதுவரை சுமார் 18 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.