இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வுக்கு பிப்ரவரி 14 இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியருக்கான 1768 பணியிடங்களை நிரப்பினால் கிடைக்கும் தேர்வர்கள், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அதிகம் காலியாக இருக்கும் மாவட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் மார்ச் 15 ஆம் தேதி வரை https://trb.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.