மலை மாவட்டமான நீலகிரியில் தேயிலை மற்றும் மலை காய்கறிகளின் விவசாயம் அதிக அளவு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மழை காய்கறிகள் மற்றும் தேயிலை தவிர்த்து பல்வேறு ஊடுபயிர்களும் பயிரிடப்பட்டு வருகின்றது. இதன் ஒரு அங்கமாக உதகை, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் ஸ்ட்ராபெரி பழ விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பார்ப்பதற்கு சிவப்பு நிறத்தில் கண்களை கொள்ளை கொள்ளும் விதமாக காட்சியளிக்கும் ஸ்ட்ராபெரி பழங்கள் இந்தியாவில் புனே, நீலகிரி உள்ளிட்ட மலை பகுதிகளில் அதிக அளவு விளைச்சல் தரக்கூடியதாக உள்ளது. 30 டிகிரி செல்சியஸ்க்கு மிகாமலும் மூன்று டிகிரி செல்சியஸ்க்கு குறையாமலும் வெப்பநிலை இருக்க வேண்டும் என்பதால் நீலகிரி ஸ்ட்ராபெரி பண்ணைகளில் சுற்றிலும் குடல்கள் அமைக்கப்பட்ட சொட்டு நீர் பாசனம் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.

மேலும் ஒரு செடியின் ஆயுட்காலம் ஒரு ஆண்டு வரை இருக்கும். இந்த செடியில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் பழம் பறிக்கப்பட்டு பேக் செய்யப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இவ்வாறு விளையும் ஸ்ட்ராபெரி பழங்கள் கேன்சர் நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு நன்மை தரும் என கூறப்படுகிறது.