நாமக்கல் மாவட்டத்தில் மோகனூர் பகுதியில் நேற்று குடிமைப்பொருள் வளங்கள் குற்றப் புலனாய்வு துறை சப் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் போலீஸ் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பாம்பாட்டி தெருவில் மொபட்டில்  சுமார் 150 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் ரோந்து  பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ரேஷன் அரிசி மூட்டைகளை  பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக ஒருவந்தூரை சேர்ந்த ராகுல்(21), முருகன் என்ற சொர்ணேஸ்வரன் ஆகிய இரண்டு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.