மகாராஷ்டிரா நாக்பூரில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது, 15 வயது சிறுமி ஒருவர் யூடியூப்பில் வீடியோ பார்த்து குழந்தையை பெற்றெடுத்தார். இதையடுத்து அந்த குழந்தையை கொன்று பெட்டியில் அடைத்தார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். நாக்பூரின் அம்பாஜாரி பகுதியை சேர்ந்த சிறுமி தனக்கு உடல்நிலை சரியில்லை என தனது தாயிடம் கூறி கர்ப்பத்தை மறைத்து வந்து உள்ளார்.

மேலும் யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக யூடியூப்பில் வீடியோக்களை பார்த்து பிரசவம் குறித்த தகவல்களை சேகரிக்க ஆரம்பித்தார். அதனை தொடர்ந்து சிறுமி, மார்ச் 2ம் தேதி வீட்டில் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அதன்பின் சிறுமி பிறந்த குழந்தையை கழுத்தை நெரித்து கொன்றதோடு, சிசுவின் உடலை வீட்டிலுள்ள பெட்டியில் மறைத்து வைத்தார்.

சிறுமி ஆன்லைனில் சந்தித்த ஒரு நபருடன் நட்பாக இருந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது சிறுமியை அந்நபர் ஒரு நண்பரின் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மது அருந்த செய்த பின் சிறுமியை கற்பழித்ததாக கூறப்படுகிறது. குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கையின் படி  கொலை வழக்குகள் பதிவுசெய்யப்படும் என அதிகாரி ஒருவர் கூறினார்.