சென்னையில் இருந்து 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஆம்னி பேருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை மணி என்பவர் ஓட்டினார். நேற்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பாலி தமிழ்நாடு சிறப்பு காவல் படை முகாம் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலை நடுவே இருந்த தடுப்புகளை உடைத்து கொண்டு சென்னை நோக்கி சென்ற கன்டெய்னர் லாரி மீது மோதியது.

இந்த விபத்தில் 15 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 15 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.