மணப்பாறை அடுத்த கருத்த கோடாங்கி பட்டியை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவருடைய மகள் ஸ்ரீநிதி (15). அங்குள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் நிலையில் அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான அஜித் என்ற 19 வயது நபரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திடீரென்று ஸ்ரீநிதி வீட்டை விட்டு மாயமாகியுள்ளார்.

இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்திய நிலையில் அப்போது கிராமத்தை ஒட்டி இருக்கும் காட்டுப்பகுதியில் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அங்கு சென்று பார்த்த போது மாணவி கழுத்தில் தாலியுடன் தூக்கில் தனது காதலனுடன் தொங்கியபடி இருந்துள்ளார். வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் ஒன்று சேர்ந்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் தாலி கட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.