மதுபான சில்லறை விற்பனை கடை அனைத்து பணியாளர்களும் தேர்தலின் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் போது 50 சதவீதத்திற்கும் மேல் மதுபானங்கள் இருப்பு வைத்திருக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சராசரி விற்பனை 30 சதவீதத்திற்கும் மேல் செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மொத்தமாக மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது. குறித்த நேரத்திற்கு மேல் கடைகள் இயங்கக்கூடாது. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட கண்காணிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் ஆய்வு செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.