நீலகிரியில் 50க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்து இரண்டு பெண்களை மிதித்து கொன்ற அரிசி ராஜா யானை மீண்டும் வனப்பகுதியில் இருந்து நகர் பகுதிக்கு வந்துள்ளது. தற்போது அந்த யானை கேரளா அருகே சுல்தான் பத்தேரி பகுதியில் உலா வருவதாகவும் ஒருவரை தூக்கி வீசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதன் சுற்றுவட்டாரத்திற்கு உட்பட்ட 10 டிவிசன் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.