புதுச்சேரி மாநிலத்தில் ஜி 20 மாநாடு ஜனவரி 31 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதால் ஐந்து இடங்களில் இன்று முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விமான நிலையம், விழா அரங்கு மற்றும் வெளிநாடு பிரதிநிதிகள் தங்கும் ஹோட்டல்கள் ஆகியவற்றில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜி 20 மாநாடு பாதுகாப்பு ஏற்பாடுகள் கருதி இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டால் யாருக்கும் எந்த தொந்தரவும் இருக்காது. பள்ளி கல்லூரிகள் மற்றும் அனைத்து நிறுவனங்கள் வழக்கம் போல இயங்கும். இந்த மாநாட்டை பார்ப்பதற்கு பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது. பத்து நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்ள உள்ளனர். இதனால் புதுச்சேரி மாநிலம் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.