இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்து ரூபாய் நாணயங்கள் செல்லாது என்று மக்கள் மத்தியில் பரவலாக ஒரு எண்ணம் இருந்து வருகிறது. அது தொடர்பாக ரிசர்வ் வங்கி பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டாலும் பத்து ரூபாய் நாணயம் செல்லாது என்ற பொய்யான தகவல் தொடர்ந்து பரவி வருகிறது. இன்றும் பல கிராம பகுதிகளில் உள்ள கடைகளில் பத்து ரூபாய் நாணயம் மறுக்கப்படுகிறது. இந்நிலையில் பத்து ரூபாய் நாணயங்களை அனைத்து பேருந்துகளிலும் வாங்க வேண்டும். இதுகுறித்து பேருந்தினுல் போஸ்டர் ஒட்ட மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டும். வங்கியிலும் போஸ்டர் ஒட்ட வேண்டும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.