ஹிந்தி சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ஷில்பா ஷெட்டி. இவரின் தனித்துவமான நடிப்பிற்கும் செயல்களுக்கும் இவருக்காக பல லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் தமிழில் பிரபுதேவா உடன் ஒரு படத்தின் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார். விஜயுடன் ஒரு படத்தில் முழு பாடலுக்கும் நடனமாடி இருந்தார். இவர் தொழிலதிபர் ராஜ் குத்ராவை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு தற்போது 47 வயதான போதிலும் இன்னும் அதே இளமையுடன் தான் இருந்து வருகிறார் . இந்த நிலையில் தற்போது சமூக வலைதளத்தில் நடிகை ஷில்பா செட்டி தன்னுடைய கணவரை விவகாரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஷில்பா ஷெட்டி கணவர்   மாடல் நடிகைகளை நிர்வாண படங்களில் நடிக்க வைத்து வீடியோ எடுத்து அதை படமாக வெளியிட்டு பணம் சம்பாதித்த குற்றச்சாட்டில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். வெளியே வந்த இவர் சத்தமில்லாமல் இருந்த நிலையில் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார் .அதில் நாங்கள் பிரிந்துள்ளோம். இந்த கடினமான காலகட்டத்தில் எங்களுக்கு நேரத்தை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என்று பதிவிட்டுள்ளார். ஆனால் இதில் யாருடைய பெயரையும் குறிப்பிடாத காரணத்தால் அவர் தன்னுடைய மனைவி ஷில்பா ஷெட்டியை  தான் விவகாரத்தை செய்துவிட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.