கேரள மாநிலம் எர்ணாகுளம் ஆலுவா பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் வாலிபர் ஒருவருடன் பழகி வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படும் நிலையில் சிறுமி அந்த வாலிபரை காதலிப்பது அவரது தந்தைக்கு தெரியவந்துள்ளது. இதனால் தனது மகளை கண்டித்துள்ளார். ஆனாலும் சிறுமி காதலை கைவிடாமல் தொடர்ந்து அந்த வாலிபருடன் பேசி வந்துள்ளார். அவரிடம் இருந்த செல்போனை தந்தை பறித்து வைத்த பிறகும் வேறொரு போன் மூலமாக தனது காதலனுடன் அவர் பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் தந்தை சம்பவத்தன்று தனது மகளை இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கியுள்ளார். இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த மகளின் வாயில் வலுக்கட்டாயமாக பூச்சி மருந்தை ஊற்றியுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் கணவனிடம் இருந்து மகளை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். தொடர்ந்து சிறுமியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதனிடையே மருத்துவமனை கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிறுமியின் தந்தையை கைது செய்துள்ளனர்.