மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் சுனிஜர் வர்மா என்பவரை காதலித்துள்ளார். ஆனால் திடீரென அந்த பெண் வர்மாவுடன் காதலை முறித்துக் கொண்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த வர்மா தனது நண்பர் ரமேஷ் என்பவர் உடன் சேர்ந்து அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு மூன்று பேர் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் இரண்டு நண்பர்களும் சேர்ந்து அந்த பெண்ணின் மீது தீ வைத்துள்ளனர். இதில் அந்தப் பெண் அலறியதால் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது உடல் முழுவதும் காயங்களுடன் சிகிச்சை எடுத்து வரும் அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.