டெல்லியை சேர்ந்தவர் பியூஸ் பால். இவர் ஃப்ரீ லான்சராக படம் எடுப்பவர். சம்பவத்தன்று இவரும் அவரது நண்பரும் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களது பைக் விபத்தில் சிக்கியது. இதில் பியூஸ் பால் படுகாயம் அடைந்து அதிக ரத்தப்போக்குடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

அவரது நண்பரும் காயம் அடைந்திருந்த நிலையில் சுற்றி இருந்தவர்கள் புகைப்படம் எடுத்தார்களே தவிர உதவ முன் வரவில்லை என்று கூறியுள்ளார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பியூஸ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.