இந்தியாவில் பெரிய காப்பீட்டு நிறுவனமாக உள்ள எல்ஐசி வாடிக்கையாளர்களுக்கு பல சேமிப்பு திட்டங்களை வழங்கி வருகிறது. அதில் மூன்று மடங்கு லாபம் தரக்கூடிய திட்டமும் உள்ளது. அதாவது SIIP என்ற திட்டம் பிரீமியம் யூனிட் இணைக்கப்பட்ட திட்டம் ஆகும். இது பாதுகாப்பான வருமானம் மற்றும் நன்மைகளுக்கான உத்திரவாதத்தை வழங்குகின்றது. இந்த திட்டத்தில் 21 ஆண்டுகளுக்கு பிரீமியம் செலுத்த வேண்டும். திட்டத்தின் முடிவில் மூன்று மடங்கு தொகையை நீங்கள் திரும்பப் பெறலாம்.

அதே சமயம் இதில் மாதாந்திர, அரையாண்டு, காலாண்டு மற்றும் வருடாந்திர பிரீமியம் செலுத்துவதற்கான விருப்பமும் உள்ள நிலையில் ஆண்டுக்கு 40 ஆயிரம் ரூபாய் என மாதம் 4 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் நான்கு லட்சத்தி 80 ஆயிரம் காப்பீடு கிடைக்கும். இந்த திட்டத்தை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலம் பெறலாம். மேலும் இதில் தினமும் 134 ரூபாய் சேமித்தால் மாதம் தோறும் நான்காயிரம் ரூபாய் செலுத்தி 21 ஆண்டுகளில் முதலீட்டுத் தொகை 10,08,000 ரூபாய் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.