நாடு முழுவதும் வருகின்ற நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் அரசு பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதன்படி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயிலில் பட்டாசு உள்ளிட்ட வெளிப்பொருட்கள் எடுத்துச் சென்றாள் மூன்று ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் வழக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தீபாவளிக்கு மக்கள் பலரும் தங்கள் சொந்த ஊர் செல்ல திட்டமிட்டு உள்ள நிலையில் பேருந்து மற்றும் ரயில்களில் அதிக அளவு முன்பதிவு செய்துள்ளனர். இவ்வாறான நிலையில் ரயிலில் பட்டாசுகள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.