ஈரோடு மாவட்டத்திலுள்ள சென்னிமலை முனியப்பன் கோவில் வீதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தரணி என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சரியாக பள்ளிக்கு செல்லாமல் இருந்த தரணியை அவரது பெற்றோர் சென்னிமலை அருகே இருக்கும் வேறு ஒரு தனியார் பள்ளியில் சேர்த்தனர். அதன் பிறகும் சரியாக படிக்காமல் அடிக்கடி செல்போன் உபயோகித்துக் கொண்டிருந்த தரணியை பெற்றோர் கண்டித்ததாக தெரிகிறது.

இதனால் மன உளைச்சலில் இருந்த தரணி கடந்த 11-ஆம் தேதி தனது வீட்டில் வைத்து விஷம் குடித்து மயங்கி விழுந்துவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் தரணியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு சிகிச்சை பலனின்றி தரணி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.