கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வெண்டலிகோடு பாம்பு தூக்கி விளை பகுதியில் ரதீஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தச்சு வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு உஷா என்ற மனைவியும் இரண்டு மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அருமையான ரதீஷ் அடிக்கடி தனது மனைவியை அடித்து துன்புறுத்தி உள்ளார். இதனால் உஷா தனது மகளுடன் கணவரை விட்டு பிரிந்து சென்று விட்டார்.

இந்நிலையில் மனைவி மற்றும் மகள்கள் பிரிந்து சென்றதால் மன உளைச்சலில் இருந்த ரதீஷ் அளவுக்கு அதிகமான மது குடித்துவிட்டு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரதீஷின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.