தமிழ்நாட்டில் இன்று 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த பொது தேர்வில் 94.3% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி தமிழ்நாட்டில் மொத்தமாக 7,55,451 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 4,05,753 (96.38%) மாணவிகளும், 3,49,697 (91.45%) மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகளே 4.93 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த தேர்வில் 326 அரசு மேல்நிலை பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் 89.80 சதவீதமும், அரசு உதவி பெறும் பள்ளிகள் 95.99 சதவீதமும், தனியார் பள்ளிகள் 99.08 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் அதிகம் தேர்ச்சி பெற்ற மாவட்டத்தில் விழுப்புரம் முதலிடத்திலும் திருப்பூர் இரண்டாம் இடத்திலும் பெரம்பலூர் மூன்றாம் இடத்திலும் இருக்கிறது.