தமிழ்நாட்டில் இன்று பொது தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த தேர்வில் மொத்தமாக 7,55,451 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூன் 19-ம் தேதி துணை தேர்வுகள் நடைபெறும் என தற்போது பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.