தமிழகத்தில் இன்று 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்த தேர்வில் மொத்தமாக 94.3% மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விதத்தில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் 326 அரசு மேல்நிலைப் பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.