தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார். இந்த பொது தேர்வில் 94.03 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 97.85 சதவிகிதத்துடன் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. திருப்பூர் இரண்டாவது இடத்தையும், பெரம்பலூர் மாவட்டம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ள நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் கடைசி இடத்தை பிடித்துள்ளது. அதே சமயம் 326 அரசு பள்ளி மாணவர்கள் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல இந்த ஆண்டு மாணவர்களை விட மாணவிகளை அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 8,03,385 பேர் தேர்வு எழுதிய நிலையில் 7,55,451 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தில் மே 19 ஆம் தேதி 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். ஏப்ரல் ஆறு முதல் இருபதாம் தேதி வரை நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொது தேர்வு 9 லட்சத்து 76 ஆயிரத்து 89 மாணவ மாணவிகள் எழுதினர். இதில் ஆங்கில பாடத்தில் தவறாக கேட்கப்பட்ட மூன்று ஒரு மதிப்பெண், 1 இரண்டு மதிப்பெண் கேள்விக்கு முழு மதிப்பெண் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.