டெல்லியில் பணியின்போது விபத்தில் இரு கைகளை இழந்த பெயிண்டர் ராஜ்குமாருக்கு, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் இரு கைகளை பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். இந்த அறுவை சிகிச்சையை 11 மருத்துவர்கள் கொண்ட குழுவினர் 12 மணி நேரத்தில் வெற்றிகரமாக முடித்துள்ளனர்.

மூளைச்சாவு அடைந்த ஒரு பெண் இறப்பதற்கு முன் தனது கைகளை தானமாக கொடுத்துள்ளார். அந்த கைகளையே ராஜ்குமாருக்கு பொருத்தியுள்ளனர். இது இந்திய மருத்துவத்துறை வரலாற்றில் மைல்கல்லாக இருக்கும் என்று கூறப்படுகிறது.