மத்திய அரசு ஊழியர்களின் அகலவிலைப்படியை நான்கு சதவீதம் உயர்த்த அனுமதி அளித்திருக்கிறது மத்திய அமைச்சரவை. பிரதமர் மோடி தலைமையில் இன்று மாலை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 42 சதவீதமாக இருந்த அகலவிலைப்படி 46 சதவீதமாக உயர்த்தப்பட்டது. அது தற்போது 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அரசு ஊழியர்களின் சம்பளம் கணிசமாக உயரும்.