சென்னை ஈசிஆர் கன்னத்தூர் பகுதியில் புதிதாக கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. இந்நிலையில் கனமழை காரணமாக கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மெலும் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து கன்னத்தூர் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.