சில காலமாகவே நாடு கடந்த காதல் பேசு பொருளாகி வருகிறது. பாகிஸ்தான் பெண் இந்தியாவிற்கு வருவதும், இந்திய பெண் பாகிஸ்தான் செல்வதுமாக தொடர்ந்த நிலையில் தற்போது இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் இந்தியா வந்துள்ளார். இலங்கையை சேர்ந்த விக்னேஸ்வரி என்பவர் ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியை சேர்ந்த லக்ஷ்மணன் என்பவரை ஏழு வருடமாக பேஸ்புக்கில் காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் அவர் டூரிஸ்ட் விசா மூலமாக இந்தியாவிற்கு வந்துள்ளார். லட்சுமணன் விக்னேஸ்வரியை தனது குடும்ப உறுப்பினர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்ததோடு ஜூலை 20ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். ஆனால் விக்னேஷ்வரியின் டூரிஸ்ட் விசா முடிவடைந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் ஆறாம் தேதி அவர் மீண்டும் இலங்கைக்கு செல்ல வேண்டும். இதனால் லட்சுமணன் விக்னேஷ்வரி தம்பதி செய்வதறியாது தவித்து நிற்கின்றனர் என்று கூறப்படுகிறது.