ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் அடுத்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. பல அரசியல் கட்சி தலைவர்கள் யாரை வேட்பாளர்களாக நிறுத்தலாம் என ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு இடைத்தேர்தலில் 11 வாக்குச்சாவடிகளை தேர்தல் ஆணையம் மாற்றி அமைத்துள்ளது. வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக வாக்குச்சாவடிகள் மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நீண்ட நேரம் வாக்காளர்கள் பயணம் செய்து வாக்களிக்க கூடாது என்பதற்காகவும், வாக்குப் பதிவு குறைந்துவிடக் கூடாது என்பதற்காகவும் சிறப்பு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.