அமெரிக்காவில் உள்ள விஸ்கான்சின் மாகாணத்தில் ஒரு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் மேடிசன் பெர்க்மேன் (24) என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் அந்த பள்ளியில் படிக்கும் 11 வயது சிறுவனுடன் தகாத உறவில் இருந்துள்ளார். அந்த மாணவனுக்கு செல்போனில் ஆபாச தகவல்களை அனுப்பியதோடு பள்ளியில் உணவு இடைவேளை மற்றும் பிற நேரங்களில் அந்த ஆசிரியை மாணவரிடம் பாலியல் அத்துமீறலிலும் ஈடுபட்டுள்ளார். இது குறித்து சிறுவனின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்தப் புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மேடிசனை கைது செய்தனர்.

இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் மேடிசனுக்கு அவருடைய காதலருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் இன்னும் 3 மாதங்களில் திருமணம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் அவர் ஒரு 11 வயது சிறுவனுடன் தகாத உறவில் இருந்துள்ளார். இந்த சம்பவம் தங்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் வேதனை தெரிவித்துள்ளார். மேலும் இந்த வழக்கில் மேடிசனுக்கு 25 ஆயிரம் டாலர் பிணைத்தொகையுடன் நீதிமன்றம் நிபதனை ஜாமீன் வழங்கியுள்ளது. அதோடு அவர் பள்ளி வளாகத்தில் நுழையவோ அல்லது பள்ளிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவோ கூடாது என உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கு விசாரணையை வருகின்ற 30ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.