சென்னை மாவட்டத்தில் உள்ள மணலி ஹரி கிருஷ்ணாபுரம் பகுதியில் வெல்டரான ரவிசங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ராஜஸ்ரீ(15) அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். தற்போது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நேற்று மாணவியின் பெற்றோர் திருவொற்றியூரில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்றபோது இன்று நடக்க விருக்கும் கணித தேர்வுக்கு நன்றாக படிக்கும்படி கூறிவிட்டு சென்றனர்.

இந்நிலையில் தனக்கு கணக்கு பாடம் வராததால் அச்சத்தில் இருந்த ராஜஸ்ரீ சமையலறையில் உடல் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்து கொண்டார். இதனையடுத்து வலியில் அலறி துடித்த மாணவியை அக்கம் பக்கத்தினர் தீக்காயங்களுடன் மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.