தமிழகத்தில் ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான 1083காலி பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கான புதிய அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இந்த தேர்வு எழுத இணையதளம் மூலமாக மார்ச் நான்காம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு மாதம் 35 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 30 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க மார்ச் 4ஆம் தேதி கடைசி நாள் எனவும் இணையவழி விண்ணப்பங்களை திருத்தம் செய்வதற்கான கால அவகாசம் மார்ச் ஒன்பதாம் தேதி முதல் 11ஆம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.