ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் ஒபிஎஸ் தரப்பினர் போட்டியிடவில்லை என்று பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. பொதுக்குழு மூலம் அதிமுக வேட்பாளர் தேர்வு செய்யப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகனின் வேட்புமனுவை வாபஸ் பெற முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தற்போது ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.