தமிழ் சினிமா உலகில் அண்ணனான செல்வராகவன் இயக்குனராகவும் தம்பியான தனுஷ் ஹீரோவாகவும் அறிமுகமாகி தற்போது வெற்றிநடை போட்டு வருகின்றார்கள். இவர்கள் கூட்டணியில் வெளியான எல்லா திரைப்படங்களுமே ஹிட்டடித்தது. இதனால் இருவரும் சேர்ந்து படம் பண்ண வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றார்கள். சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று வசூல் வேட்டை நடத்தியது.

இது போலவே செல்வராகவன் நடிப்பில் வெளியான பகாசூரன் படமும் ரிலீஸ் ஆகி சில சர்ச்சைகளுக்கானாலும் நன்றாக ஓடியது. இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற செல்வராகவன் கூறியதாவது, எனக்கு சோனியா அகர்வாலுடன் விவாகரத்து நடந்த போது தனுஷ் என்னிடம் இரண்டாவது திருமணம் செய்யாதே. கடவுள் உனக்கு நல்ல வாய்ப்பை தந்திருக்கின்றார். இருப்பினும் எனக்கு நம்பிக்கை இருந்த காரணத்தினால் நான் கீதாஞ்சலியை திருமணம் செய்து கொண்டேன். அவர் எனது வாழ்க்கையை மாற்றி விட்டார் என அதில் தெரிவித்திருந்தார்.