தமிழக அரசால் வழங்கப்படும் மகளிர் உரிமை தொகையை பிச்சை என்று கூறிய பாஜகவை  சேர்ந்த நடிகை குஷ்பூவுக்கு பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் வலுத்து வருகிறது. திமுகவினர் கொதித்தெழுந்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், குஷ்பு தவறாக சொல்லியிருக்க மாட்டார்.

பெண்கள் மீது அக்கறை கொண்டவர் அவர். உள்நோக்கத்தோடு சொல்லியிருக்க வாய்ப்பில்லை. மகளிர் உரிமைத் தொகை பெண்களுக்கு பயன்படுகிறது. அரசு அவர்களை மதித்துதான் கொடுக்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.