பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் சித்தார்த் மல்கோத்ரா. இவர் பிரபல நடிகை கியாரா அத்வானியை காதலித்து வந்த வந்த நிலையில் நேற்று இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுடைய திருமணம் ராஜஸ்தானில் உள்ள சூரிய கிரக் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்தில் திரையுலக பிரபலங்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் நடிகை கியாரா அத்வானி மற்றும் சித்தார்த் மல்கோத்ரா கடந்த 2021-ம் ஆண்டு சேர்ஷா என்ற படத்தில் நடித்த போது இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. நடிகை கியாரா எம்.எஸ் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து பிரபலமானவர். மேலும் சித்தார்த் மல்கோத்ரா மற்றும் கியாரா அத்வானி ஜோடிக்கு தற்போது பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகை கியாரா அத்வானியின் திருமண விழாவின்போது விருந்தினர்களுக்கு வழங்கப்பட்ட விருந்து குறித்த தகவல் வெளிவந்துள்ளது. அதாவது திருமண விருந்து 10 நாடுகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட உணவுகள் இடம் பெற்று இருந்ததாகவும், மெனுவில் இத்தாலியன், சீனா, தென் இந்தியா, மெக்சிகன், ராஜஸ்தானி, பஞ்சாபி, குஜராத்தி போன்ற உணவு வகைகள் இடம் பிடித்திருந்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

அதோடு ஜெய் சல்மாரின் கோட்டூவான் லட்டும் பரிமாறப்பட்டுள்ளது. அதன் பிறகு விருந்தினர்களை கவனிப்பதற்காக மும்பையில் இருந்து 200 சர்வர்களும், டெல்லியில் இருந்து 300 சர்வர்களும் என மொத்தம் 500 சர்வர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர். மேலும் இவர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான உடைகள் வழங்கப்பட்டதோடு 50-க்கும் மேற்பட்ட உணவு ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.