தமிழகத்தில் 100 நாள் வேலைத்திட்ட ஊதியம் விரைவில் உயர்த்தப்படும் என்று அமைச்சர் பெரியசாமி கூறியுள்ளார். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் 100 நாள் வேலைத்திட்டத்தின் ஊதியம் 210 ரூபாயிலிருந்து 294 ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. அந்த ஊதியம் விரைவில் 300 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். சமத்துவம், சகோதரத்துவம், எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் அரசு செயல்படுகிறது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.