கடலூர் மாவட்டத்தில் உள்ள பி.முட்லூர் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீஸ் இன்ஸ்பெக்டர் குணபாலன் தலைமையிலான போலீசார் அந்த பகுதிக்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கொடிக்கால் நகர் அருகே இருக்கும் கோழிப்பண்ணையில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த 10 பேரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர்.

அந்த விசாரணையில் அவர்கள் ராதாகிருஷ்ணன், முத்துவேல், செந்தில், கோகுல் உள்ளிட்ட 10 பேர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து ராதாகிருஷ்ணன் உள்பட 10 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 13,230 ரூபாய் பணம், 10 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.